தமிழகத்தில் நாளை (ஜூலை 26) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சிவல்பட்டி ஆகிய மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஜூலை 26ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
நாட்டில் எல்லா விதமான பணிகளுக்கும் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கின்றது. மக்களுக்கு மின்சாரத்தை குறைவான விலையில், தடை இல்லாமல் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு அந்த அந்த பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கி வருகின்றன.
Exams Daily Mobile App Download
மக்களுக்கு பயன்படும் வகையில் மின் இணைப்புகளை எளிதில் பெறும் வசதியை மின்சார வாரியம் ஏற்படுத்தி இருக்கின்றன. அப்படிப்பட்ட மின் நிலையங்களில் மாதம் ஒரு முறை மின் தடை அறிவிக்கப்பட்டு மின் நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள், மின் துண்டிப்பு, சாய்ந்த மின் கம்பங்களை மாற்றுதல், உள்ளிட்ட பணிகளை மின் பணியாளர்கள் செய்து வருகின்றனர். இந்த பணிகளை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு மின் சார்ந்த பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TNPSC Group 4 தேர்வு விடைக்குறிப்பு 2022 – முழு விவரங்களுடன் !
அந்த வகையில், தற்போது ஆ.தெக்கூர் மற்றும் கீழச்சிவல்பட்டி மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர், கீழச்சிவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவினிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம்.ஆ.தெக்கூர், நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவார், முறையூர், எஸ்.எஸ்.கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை ஜூலை 26ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருப்பத்தூர் மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.