திருப்பூரில் நாளை (மே 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் வருகிற மே 22 அன்று ஊத்துக்குளி உட்பட சில பகுதிகளில் மின் நிறுத்தம் செய்ய போவதாக அம்மாவட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் மேலும் படியுங்கள்.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும். ஏனெனில் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் நேரிடவும் அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்படும். அவற்றை தவிர்ப்பதற்காக தான் மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் போராட்டம்!
இது போன்று மின் கம்பம் சம்பந்தப்பட்ட சில பணிகளினிமித்தம் மின் விநியோகம் தடை செய்யப்படும். அந்த வகையில் நாளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. அதனால் தேனீஸ்வரன் பாளையம், ராமமூர்த்தி நகர், செட்டிபாளையம், நடுத்தோட்டம், தோப்புத்தோட்டம், அய்யன்முத்தயக்காடு, கொளத்தோட்டம், கிணத்தங்காடு, ஜே.ஜே.நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படவுள்ளது.
இவ்வாறு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மே 23 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2 மணியில் தொடங்கி மாலை 4 மணி அளவுக்கு மின்தடை செய்யப்பட போவதாக அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் நாளைய பொழுதுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.