தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் போராட்டம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து வலுக்கும் போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து வலுக்கும் போராட்டம்!

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் போராட்டம்!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடியும் தருவாயில் அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்களின் PF கணக்கில் சேமிக்கப்படும். இதனுடன் இந்த தொகைக்கு இணையாக அரசு சார்பாக குறிப்பிட்ட தொகை செலுத்தப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்கள் ஓய்வு பெறும் போது இதில் இருந்து 60% தொகை மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – 30 மணிநேரம் காத்திருப்பு!

இதில் மீதமுள்ள 40% தொகையானது LIC உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை பொறுத்து மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தங்களுக்கு எந்தவித பலன்களையும் பெற முடிவதில்லை என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை என்றும் அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர். அத்துடன் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்ட சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அத்துடன் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான புதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கியின்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று போராட்ட களத்தில் முழக்கமிட்டனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!