திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – 30 மணிநேரம் காத்திருப்பு!
திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நீண்ட நேரம் தரிசனத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி தரிசனம்:
திருப்பதியில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க ஆன்லைன் மூலம் மாதந்தோறும் ரூ.300 தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் 20ம் தேதி தொடங்குகிறது. ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மாதந்தோறும் திருப்பதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு 47 நாட்கள் கோடை விடுமுறை – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
முதலில் இலவச தரிசன டிக்கெட்களும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவை திருப்பதி தேவஸ்தானத்தில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நன்றாகவே குறைந்துள்ளது. அதனால் கட்டுப்பாடுகளை முழுமையாக அரசு தளர்த்தி விட்டது. அதனால் திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதிலும் இன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இவ்வாறு அதிகரித்துள்ள பக்தர்கள் எண்ணிக்கையால் திருமலையில் தங்கும் அறைகள் முழுவதும் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஒருவருக்கு 2 லட்டுகள் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உடனடியாக விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.