தமிழகத்தில் நாளை மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
இந்தியாவில் மக்கள் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கிறது. நாட்டில் புதிய தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், போன்றவை அதிகமாக வளர்ந்து வருகின்றன. இதனால் மின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நிலக்கரி மூலம் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைய தொடங்கியுள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக மத்திய அரசு மின்னுற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த துணை மின் நிலையங்களின் மூலம் மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் துணை மின் நிலையங்களை பராமரித்து வருவதன் மூலம் தடையில்லா மின் சேவையை பெற முடியும். இந்த நிலையில் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? தேர்வு பணிகள் தொடக்கம்
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 9) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூலக்கரை, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கே.சேவல்பட்டி, கூரைக்குண்டு, தாதம்பட்டி, மாடர்ன் நகர், பாத்திநாயக்கன்பட்டி,குல்லூர்சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின் வாரிய நிர்வாக இன்ஜினியர் அகிலாண்டேஸ்வரி கூறியுள்ளார்.