உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? தேர்வு பணிகள் தொடக்கம்!
நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு பணிகள் தொடக்கம்:
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்றத்தின் 48 வது தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் நாட்டின் அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. அதாவது, எப்போதும் பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வார். அதுவே வழக்கமான நடைமுறையாகும்.
Exams Daily Mobile App Download
மேலும் கடந்த வருடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டே ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவின் பெயரை பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தற்போது தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என் வி ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான என்.வி.ரமணா, உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் பெயரை பரிந்துரை செய்துள்ளார். இதற்கான பரிந்துரை கடிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி
மேலும் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவரது பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே இருக்கும். அவர் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். மேலும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தவுடன், நாட்டின் 49 வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் வரும் 27-ந் தேதி பதவி ஏற்பார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக யு.யு.லலித் செயல்பட்டுள்ளார்.