Post Office இல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அமல்!

0
Post Office இல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அமல்!
Post Office இல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அமல்!
Post Office இல் வரவிருக்கும் புதிய மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 1 முதல் அமல்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சேமிப்பு திட்டத்துடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி அமல்படுத்த உள்ளது .

சேமிப்புத் திட்டம்:

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் பெரும்பாலானோர் தங்களின் முதலீடுகளை அதிகளவு செலுத்தி வருகின்றனர். ஏனெனில் அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் அதிகளவு வட்டி தொகையை பெற முடிகிறது. அத்துடன் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதனால் சாதாரண மக்கள் கூட இந்த சேமிப்பு திட்டங்களில் இணைய முடிகிறது. அத்துடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருவதால் 100% முழு பாதுகாப்பும் கிடைக்கிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – இணையமைச்சர் விளக்கம்!

அதனால் பொதுமக்களிடையே அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி தொகையை பொறுத்து முதலீடு பணத்திற்கான லாபத்தை பெற முடிகிறது. இந்த நிலையில் சேமிப்புதாரர்களுக்கு வட்டி தொகையை செலுத்துவதற்கான வழிமுறையை அஞ்சல் துறை மாற்றியுள்ளது. அதன்படி அஞ்சல் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர முதலீட்டுத் திட்டம், SCSS திட்டம், டைம் டெபாசிட் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி தொகையை இனி ரொக்கமாக எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் OCF தொழிற்சாலையில் 10வது முடித்தவருக்கு வேலை – உதவித்தொகையுடன் 180 காலிப்பணியிடங்கள்..!

அதாவது சேமிப்புதாரர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக வட்டி தொகையை செலுத்த உள்ளதாக அஞ்சல் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் சேமிப்பு கணக்குடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அப்பொழுது தான் வட்டி தொகையை நேரடியாக தங்களின் வங்கி கணக்கிற்கு செலுத்த முடியும். மேலும் இதனை வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு இணைக்கவில்லையென்றால் ஏப்ரல் 1ம் தேதி முதல் வட்டி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!