மத்திய அரசின் OCF தொழிற்சாலையில் 10வது முடித்தவருக்கு வேலை – உதவித்தொகையுடன் 180 காலிப்பணியிடங்கள்..!
ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலை ஆவடி (OCF) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trade Apprentice பணிக்கு என்று 180 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலை (OCF) வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஆர்ட்னன்ஸ் ஆடைத் தொழிற்சாலை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Trade Apprentice பதவிக்கு என Non ITI பிரிவில் 72 பணியிடங்கள் மற்றும் ITI பிரிவில் 108 பணியிடங்கள் என மொத்தமாக 180 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Trade Apprentice Non ITI பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Trade Apprentice ITI பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் குறைந்தது 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என தெரிவித்துள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
- Non ITI பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் மாத உதவித் தொகையாக ரூ.6,000/- முதல் ரூ.6,600/- வரை பெறுவார்கள்.
- Non ITI பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்கள் மாத உதவித் தொகையாக ரூ.7,700/- பெறுவார்கள்.
- மேலும் SC / ST / Female / PWD / Transgender விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.100/- மட்டும் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
- Merit LIst, Document Verification மற்றும் Medical Exam மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்து பணியமர்த்தப்படுவார்கள்.
OCF Avadi விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் நேரில் அல்லது தபாலில் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 25.03.2022ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.