சண்டிகர் மாநிலத்தில் இத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி பொது விடுமுறையாக UT நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொது விடுமுறை அறிவிப்பு
நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இருக்கிறது. ரம்ஜான் மாதம் தொடங்கி 30 நாட்களுக்கு பகலில் உணவு சாப்பிடாமல் இருந்து, பின் சஹர் நேரத்தில் நோன்பு திறந்து சாப்பிடுவார்கள். பகலில் இறைவனுக்காக அர்ப்பணம் செய்து, உணவு உண்ணாமல் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் கடமை என திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.
30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – அசத்தலான தேர்தல் வாக்குறுதிகள்…!
இந்நிலையில் இந்த ஆண்டு ரமலான் பண்டிகை ஏப்ரல் 11 ஆம் தேதி வர இருக்கிறது. பண்டிகையை கொண்டாடும் விதமாக பல மாநில அரசுகள் விடுமுறை விட்டுள்ளது. அந்த வரிசையில் சண்டிகர் மாநிலத்தில் இத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு 1881 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிச் சட்டத்தின் கீழ் UT நிர்வாகம் ஏப்ரல் 11, 2024 (வியாழன்) அன்று பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆனால் லடாக் அரசு “ஈத்-உல்-பித்ர்” விடுமுறை ஏப்ரல் 11, 2024க்குப் பதிலாக (வியாழக்கிழமை) ஏப்ரல் 10, 2024 அன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது.