மக்கள் பலர் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய ஏடிஎம் கார்டை பயன்படுத்த முடியுமா என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏடிஎம் கார்டு
மக்கள் அனைவரும் தற்போது வங்கி கணக்கை பயன்படுத்தி வருகின்றனர். அரசின் சலுகைகள் வங்கி கணக்கு மூலமாக வழங்கப்படுவதால் அது தேவையான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் கார்டு அவசியம். இந்நிலையில் ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய கார்டை எப்படி பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏப்ரல் 11 ஆம் தேதி பொதுவிடுமுறை – அரசு அறிவிப்பு!
பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் இறந்தவரின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார்கள். இது விதிமுறைப்படி தவறானது. இறந்தவர் கணக்கில் பணம் எடுக்க சட்ட நடைமுறைகள் இருக்கிறது. அதாவது அவருடைய சொத்தை உங்களுக்கு மாற்றிய பின் தான் அவருடைய கணக்கில் இருந்து பணம் எடுக்கலாம். அல்லது இறந்தவரின் வங்கிக் கணக்கின் நாமினியாக இருந்தால் அவருடைய இறப்பு குறித்து முதலில் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும். பின் பணத்தை எடுக்கலாம்.