தமிழக பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நாளை (ஏப்ரல் 11) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை கோவில் தேர்த்திருவிழா நடைபெற இருப்பதால் அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளிற்கு மாறாக செயல்பட இருக்கும் பணி நாள் பற்றிய அறிவிப்பினையும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் கடந்த இரு வருடங்களாக கொரோனா பரவல் இருந்து வந்தது. இதன் எதிரொலியாக கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கூட முழுமையாக மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – இனி கணினி வழி தேர்வுகள்? தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!
கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் கூட திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்த நார்த்தாமலை திருக்கோவிலின் தேர்திருவிழாவும் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் நாளை (ஏப்ரல் 11) விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வந்தனர். அதன்படி, நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி & கல்லூரிகள் மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகங்களுகும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.