TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – இனி கணினி வழி தேர்வுகள்? தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பாண்டிற்கான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் தேர்வில் புதிய மாற்றங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய மாற்றங்கள்:
தமிழக அரசு அலுவலக பணிகளுக்கான பணியாளர்களை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்கிறது. இதற்காக போட்டித்தேர்வுகள் நடத்தப்படும். அதன் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். போட்டித்தேர்வுகளின் விடைத்தாளானது ஓ.எம்.ஆர் முறைப்படி இருக்கும். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தான் இறுதியாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து கொரோனா தொற்று பேரலை காரணமாக அனைத்து பொது நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், தொற்று பரவும் அபாயம் அதிக அளவில் இருந்து வந்ததால் அரசு பணி தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தற்போது தான் தொற்றின் அபாயம் குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளதால் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக குரூப் 2, 2A தேர்வுகள் மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளை அறிவித்துள்ளது. இதேபோல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி அன்று வெளியிட்டுள்ள நிலையில், மொத்தம் 16 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு ஜூன் 19ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணிவரை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை பொது அறிவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் இதுவரை அனைத்து தேர்வுகளும் எழுத்து முறையில் நடந்து வந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கு கணினி வழியாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் அதிகமான தகவல்கள் அதிகாரபூர்வ தலத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.