அரசு துறைகளில் இன்னும் 3 மாதங்களில் 14,000 ஊழியர்கள் நியமனம் – மாநில அரசு உறுதி!
திரிபுரா அமைச்சரவை அடுத்த 3 மாதங்களுக்குள் கல்வி, உள்துறை, கால்நடை வள மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளின் கீழ் பல்வேறு பதவிகளில் 14,299 பேரை பணி நியமனம் செய்ய உள்ளதாக உறுதியளித்துள்ளது.
அரசு பணி நியமனம்:
திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரில் கடந்த வியாழக்கிழமை மாநில முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்த விவாதமும் நடைபெற்றது. அப்போது, அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வித் துறையின் கீழ் 4,441 ஆசிரியர்களும், உள்துறையின் கீழ் 6067 சிறப்பு நிர்வாகிகளும், கால்நடை வள மேம்பாட்டுத் துறையின் கீழ் 17 பேராசிரியர்களும், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 374 பேரும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் அவர்கள், இதுவரை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 3,447 ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும், உயர் கல்வித் துறையின் கீழ் 1072 இடங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கோவிட் தொற்றுநோய் காரணமாக, மிதிவண்டி வழங்கும் விழா நடத்தப்படாமல் இருந்தது. எனவே, 2020-21 மற்றும் 2021-22 கல்வியாண்டில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 44,673 பேருக்கு மிதிவண்டியை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மிதிவண்டிக்கும் ரூ.3,828 செலவாகும்.
தமிழகத்தில் அக்.05 வரை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
Exams Daily Mobile App Download
இதற்காக அரசு மொத்தமாக, ரூ.17 கோடியே 10 லட்சம் செலவு செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், மாநில அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் ஐசிஏ அமைச்சருமான சுஷாந்தா சவுத்ரி அவர்கள், ‘முதலமைச்சர் சமூக உதவித் திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது, இதில் 30,000 புதிய பயனாளிகளுக்கு அடுத்த ஒரு மாதத்தில் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்