HDFC வங்கியின் ரூ.18,000 நிதியுதவியை பெற வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
பின்தங்கிய பின்னணியை சேர்ந்த மாணவர்களுக்கு HDFC வங்கி நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியுதவியை பெற வேண்டும் என விரும்பினால் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி:
இந்தியாவில் உள்ள பின்தங்கிய பின்னணியை சேர்ந்த உயர் செயல்திறன் கொண்ட மாணவர்கள் தங்களது மேற்படிப்பை தொடர HDFC வங்கி நிதியுதவி வழங்கி வருகிறது. அதாவது, மாணவர் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என அனைத்து செலவுகளையும் சமாளிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், HDFC வங்கியின் நிதியுதவியை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். அதாவது, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர் இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படித்து கொண்டிருக்க வேண்டும் மற்றும் மாணவர் முந்தைய வகுப்பில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 6 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் இந்தியாவை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், HDFC வங்கி வழங்கும் இந்த உதவித்தொகையை விண்ணப்பத்தாரர் கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம் ஆகிய கல்வி செயல்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் செப்.27 முதல் பிரம்மோற்சவ விழா – சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
மேலும், HDFC வங்கியின் உதவித்தொகையை பெற என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை பார்க்கலாம். பாஸ்போர்ட் புகைப்படம், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை / வாக்காளர் ஐடி / ஓட்டுநர் உரிமம் / பான் கார்டு, நடப்பு ஆண்டிற்கான சேர்க்கை சான்று, விண்ணப்பதாரரின் வங்கி பாஸ்புக் புத்தகம், வருமானச் சான்று ஆகிய ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும், HDFC வங்கியின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Return mani