தமிழக நீதிமன்றங்களில் அரசு வழக்குரைஞர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் அரசு வழக்குரைஞர் பணிகளுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வழக்குரைஞர் பணி
தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்கக்கூடிய இந்த சூழலில் பல்வேறு வகையான செயல்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் அரசு வழக்குரைஞர் பணிகளுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்களுக்கு 20% வரை சம்பள உயர்வு – மாநில அரசு முடிவு!
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் உள்ள போதைப்பொருள்கள் கடத்தல் விசாரிப்புகளை நடத்தும் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் சில அரசு வழக்குரைஞர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட இருக்கிறது. அதே போல சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் கூடுதல் அரசு வழக்குரைஞர் பணிகளிலும் சில காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
இப்போது இந்த 2 பணிகளுக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதனால் ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.chennai.nic.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப படிவங்களை சென்னை மாவட்ட ஆட்சியர், சிங்காரவேலர் மாளிகை, எண் 62 ராஜாஜி சாலை, சென்னை 1 என்ற முகவரியின் கீழ் டிசம்பர் 13ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.