தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை கொட்டிவருவதை அடுத்து இன்று (நவ.30) 14 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி:
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் பல சாலைகள் வெள்ளக்காடாய் மாறின. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். அதனால் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், 14 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
PGTRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு
அதே போல தூத்துக்குடி,திருவள்ளூர்,மதுரை,திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மதுரையில் காலை 3 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதனால் முல்லை பெரியாறு அணை தன்னுடைய முழு கொள்ளளவை அடைந்தது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல நீர் ஆதாரங்கள் நிரம்பி உள்ளனர். இதனால் மக்கள் தண்ணீர் தட்டுப்பாடு இனி இல்லை என நிம்மதியில் இருக்கின்றனர்.