ரெடியாக இருங்கள் இளைஞர்களே.. ஆப்பிள் நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – ஜாக்பாட் அறிவிப்பு!
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முழு கவனம் செலுத்தி விற்பனையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதனால், இந்திய இளைஞர்கள் பலருக்கும் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
வேலைவாய்ப்பு:
ஆப்பிள் நிறுவனம் தனது விற்பனையை இந்தியாவில் நேரடியாக தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் முக்கிய இடங்களில் ரீடெயில் கடைகளை தொடங்க உள்ளது. இதனால் இந்த ரீடெயில் கடைகளில் பணியாற்ற டெக்னிக்கல் ஸ்பெஷலிஸ்ட், ஸ்பெஷலிஸ்ட், ஆபரேஷன்ஸ் எக்ஸ்பர்ட், பிஸ்னஸ் எக்ஸ்பர்ட், எக்ஸ்பர்ட், பிஸ்னஸ் பிஆர்ஓ, கிரியேட்டிவ் ஆகிய பதவிகளுக்கு ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் 13, 14,18ம் தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை கால நேரம் நீட்டிப்பு – நிர்வாகம் அறிவிப்பு!!
ரீடெயில் கடைகள் அமைய உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு விற்பனை தொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளதால், குறிப்பிட்ட உள்ளூர்களில் இருந்து தான் ஊழியர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும், நல்ல தொடர்பு திறன் கொண்டவர்கள், தகவல் தொழில்நுட்ப ரீதியாக விளக்கம் அளிக்க கூடியவர்கள், ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவிற்கான இணையதளத்தில் உள்ள பதவிகளுக்கு உங்கள் விவரங்களை அனுப்பி பயனடைந்து கொள்ளலாம்.