இந்திய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே – குடியரசுத் தலைவர் நியமனம்!
இந்திய தேர்தல் ஆணையராக பதவியில் இருந்த சுஷீல் சந்திரா பதவி உயர்வு பெற்ற பிறகு புதிய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே அவர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையர்
இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையராக பதவியில் இருந்த சுனில் அரோராவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையராக பதவியில் இருந்து வந்த சுஷீல் சந்திரா, தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி உயா்வு பெற்றுள்ளார். இதனால் சுஷீல் சந்திராவின் பதவி இடம் காலியானது. அந்த இடத்துக்கு தற்போது அனூப் சந்திர பாண்டே என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாா்.
வழக்கறிஞர்களுக்கு நோட்டரிக் பப்ளிக் அங்கீகாரம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள இவரை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார். இவருக்கு 65 வயது பூா்த்தியாகும் வரையிலும், அதாவது 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவா் தேர்தல் ஆணையராகப் பதவி வகிப்பாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் 1984 ஆம் ஆண்டு வரை ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தவர்.
TN Job “FB Group” Join Now
தவிர இந்த பதவிக்கு வரும் முன்னதாக அவர் உத்தர பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலா் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தேர்தல் அதிகாரியாக இவர் பொறுப்பேற்பதற்கு முன் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமியற்றல் துறை நேற்று அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்களின் தலைமையின் கீழ் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது குறிப்பிடத்தக்கது.