வழக்கறிஞர்களுக்கு நோட்டரிக் பப்ளிக் அங்கீகாரம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
கோவையை சேர்ந்த வக்கீல்கள் மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெறுவதற்கு, நீதித்துறை நிர்வாகம் நோட்டீஸ் போர்டில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நோட்டரிக் பப்ளிக் அங்கீகாரம்:
சில இடங்களில் அதாவது நாம் வேலை மற்றும் கல்வி தொடர்பாக சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். எல்லா இடங்களிலும் நாம் அசல் சான்றிதழை (ஒரிஜினல்) சான்றை சமர்ப்பிக்க இயலாது. அதன் நகல்களை சமர்பிப்போம். அதன் உண்மைத்தன்மையை தகுதி படைத்த நபர் உறுதி செய்ய வேண்டும். அவர்தான் நோட்டரி பப்ளிக் ‘உண்மை நகல்’ என்று இவர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால் அது சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
நெல் குவிண்டால் ஆதார விலை ரூ.72 உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!
வழக்கறிஞர்களாக குறைந்தபட்சம் ஏழு வருடங்கள் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே நோட்டரி பப்ளிக் ஆவதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தை மூத்த நோட்டரிகள் இரண்டு பேர் சிபாரிசு செய்து கையெழுத்திட வேண்டும். பிறகு அதற்குரிய கட்டணம் செலுத்தி மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்க வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதி விஷயங்களில் மட்டுமே நோட்டரியாக செயல்பட முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அலுவலகங்கள் வைத்து செயல்பட விரும்பினால் அவர் ‘ஆல் இந்தியா நோட்டரி’ ஆக செயல்பட மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
TN Job “FB Group” Join Now
தற்போது மத்திய அரசு சார்பில் கோவையை சேர்ந்த வக்கீல்கள் நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெறுவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் கோர்ட்டில் வழக்கு நடத்திய அனுபவம் இருந்தால், நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில், நோட்டரி அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. மாவட்ட நீதித்துறை நிர்வாகம் நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் 30ம் தேதி கடைசி நாள் என்று சென்னை ஐகோர்ட் பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.