தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடைத்தாள் திருத்தும் பணிகள்!
இரண்டு வருட கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பொதுத்தேர்வுகள் எவ்வித தடையுமின்றி நடத்தப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது. இதை குறித்த மேலும் தகவல்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
வினாத்தாள் திருத்தம்:
தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு எவ்வித தடைகளுமின்றி மே 5ந் தேதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், 6ந் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் கடந்த 10ந் தேதி பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு சுமார் 26 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். மேலும் வினாத்தாள் கசிவு ஏற்படாமல் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தேர்வுத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்படுத்துகின்றனர்.
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!
இன்னும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 தேர்வுகளும், 10 ஆம் வகுப்பினருக்கு மீதம் 4 தேர்வுகளும் மட்டுமே நடக்க உள்ளது. 10, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் வருகிற மே 31ந் தேதிக்குள் நடந்து முடிந்து விடும். இவ்வாறு தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன. அதாவது இதுவரையில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் விதமாக ஒரு மாவட்டத்தில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு திருத்தும் பணிக்காக முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இவ்விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருவது போலவே மீதம் நடைபெற உள்ள தேர்வு வினாத்தாள்களும் அனுப்பப்படும். இதை குறித்து அதிகாரி ஒருவர் பேசுகையில் தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் எத்தனை மையங்களில் விடைத்தாள் திருத்தப்படும், எத்தனை ஆசிரியர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இதிலிருந்து விடைத்தாள் திருத்தும் பணி விரைவில் முடிவுக்கு வந்து ஜூன் இறுதியில் பொதுத்தேர்வு முடிவு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.