தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அதன்படி இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

வட உள் தமிழகத்ததின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக,

18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, நாமக்கல்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்‌, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

19.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, நாமக்கல்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20.05.2022 முதல்‌ 22.05.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

18.05.2022, 19.05.2022: தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, இலட்சதீவு, மாலத்தீவு, கர்நாடகா – கேரளா கடலோர பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்‌இலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌, அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

20.05.2022 முதல்‌ 21.05.2022 வரை: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, வட கேரளா-கர்நாடகா கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

தெற்கு வங்கக்கடல்‌, அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

22.05.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!

தெற்கு வங்கக்கடல்‌, அந்தமான்‌, மத்திய இழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!