மத்திய அரசு அலுவலர் பணிக்கான தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு!
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு -2020 தாள்-2 தேர்வு, கடந்த ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
விடைக்குறிப்பு வெளியீடு:
இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய, இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது. இந்த தேர்வாணையம் மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பம் அல்லாத) அலுவலர்களுக்கான தேர்வு-2020 அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இது 2 வகை தேர்வுகளை கொண்டது. தாள்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் தாள்- 2 தேர்வு எழுத முடியும். இதையடுத்து தாள் -1 தேர்வு நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் நடைபெற்றது.
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஷாக் அறிவிப்பு – 43 ஆயிரம் பேர் ஆப்சென்ட்!
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு மையத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10, 11, 12-ம் வகுப்பு படித்தவர்கள், இளநிலை, முதுநிலை படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் தேர்வு எழுதினர். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தாள்-1 தேர்வு முடிவுகள் மற்றும் வகுப்பு வாரியாக கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தாள்-2 தேர்வு 26.04.2022 அன்று நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இந்த தேர்வில் தாள்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதனை தொடர்ந்து வினாத்தாள் உடன் இறுதி விடை குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு எண், பாஸ்வேர்ட் கொடுத்து தாங்கள் எழுதிய விடையையும், வினாத்தாளையும் இணையத்தில் பார்வையிடலாம். மேலும் தங்களுக்குரிய வினாத்தாள்களை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளலாம். இந்த லிங்க் வசதி வரும் ஜூன் 06, 2022 வரையிலும் இருக்கும். அதன் பிறகு லிங்க் வசதி இணைப்பு செயலில் இருக்காது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.