தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஷாக் அறிவிப்பு – 43 ஆயிரம் பேர் ஆப்சென்ட்!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வாரம் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வுக்கு வருகை தரவில்லை. இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க உள்ளதாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது என்று கூறப்படுகிறது.
11ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர நடத்தப்படவில்லை. அத்துடன் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளன. அத்துடன் இந்த ஆண்டு குறைவான நாட்களே பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டதால் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
Exams Daily Mobile App Download
அத்துடன் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களும் இந்த குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து மட்டுமே கேட்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட்டபடி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வாரம் பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. இதையடுத்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத்தேர்வு தொடங்கியது. மேலும் தேர்வில் முறைகேடுகள் ஏற்படாமல் இருக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 பேர் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று தேர்வு தொடங்கிய நிலையில் இத்தேர்வில் 43 ஆயிரத்து 553 மாணவர்கள் வருகை தரவில்லை என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சம் இருப்பதால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து சரியான காரணத்தை கண்டறிந்து தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.