நாட்டை உலுக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் தொற்று – சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

0
நாட்டை உலுக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் தொற்று - சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
நாட்டை உலுக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் தொற்று - சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

நாட்டை உலுக்கும் மற்றொரு புதிய வகை வைரஸ் தொற்று – சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா வைரஸின் தொற்றினாலும், அதனை தொடர்ந்து பல்வகையான அதன் உருமாற்றங்களினாலும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களை அச்சுறுத்த மேலும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.

புதிய வகை தொற்று:

தமிழகத்தை மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த நாட்டையும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டி படைத்து வருகிறது கொரோனா வைரஸ். முதல் அலை வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு, அதன் உருமாற்றம் அடைந்த வகைகளினால் மேலும் பாதிப்பு அதிகமாகியது. இதனால் தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன்பிறகும், ஊரடங்கு தொடர்ந்தால் மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகி விடும் என்பதை உணர்த்த அரசு நோய் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை அதிகமாக்கியது.

இதன்விளைவால், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியது. இதனால் மக்கள் தங்கள் இயல்புக்கு திரும்ப தொடங்கினர். ஆனால், அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக கொரோனா பரவலிற்கு பிறகு, நாட்டில் புதிய வகை வைரஸ் தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் குரங்கு அம்மை நோய் உலக சுகாதார அமைப்பால் தீவிர நிலையாக அறிவிக்கப்படும் அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வகை தொற்றாக தக்காளி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 5 வயது குழந்தைகளை இந்த வகை வைரஸ் அதிக அளவில் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய தகவல்!

Exams Daily Mobile App Download

தக்காளி வைரஸ் தொற்று கேரளாவில் மொத்தம் 82 குழந்தைகளுக்கும், ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும், நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகளாக கடும் காய்ச்சல் மற்றும் உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக கேரளா மாநில எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!