சபாஷ்.. வேற லெவல் – மகளிருக்காக அரசு எடுத்துள்ள மற்றொரு அசத்தல் முயற்சி – வரவேற்கும் மக்கள்!
வேலை மற்றும் கல்வி காரணமாக வெளியூரில் தங்கி படிக்க வேண்டிய நிலை உள்ள பெண்களுக்கு தங்குமிடம் பெரிய பிரச்சினையாக உள்ள நிலையில் கேரள அரசு இதற்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்கள் குறைந்த விலையில் தங்கும் இட வசதியைப் பெற முடியும்.
பெண்களுக்கு விடுதி:
சொந்த ஊரைவிட்டு கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளியூருக்கு செல்ல வேண்டிய பெண்கள் அனைவருக்கும் எழும் முதல் பிரச்சனை தங்குமிடம் தான். பெண்கள் தங்குவதற்கு பாதுகாப்பான சூழ்நிலையில், குறைந்த கட்டணத்தில் தங்கும் இடம் என்பது கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது. இதனால் பெண்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து புதிய வாய்ப்புகளை பெற முடியாமல் போகின்றது.
இதற்காக கேரளா அரசு தற்போது ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. கேரளாவில் கொச்சி மாநகராட்சியில், குறைவான கட்டணத்தில் செயல்படும் விடுதி ஒன்று அமைச்சர் எம்.பி. ராஜேஷ் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘அவள் விடுதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கொச்சி மாநகராட்சியின் கீழ் உள்ள பரமாரா லாட்ஜ் என்ற விடுதி ஒன்று உள்ளது. இதை தான் பெண்களுக்கு பயனுள்ள வகையில் தற்போது அரசு மாற்றி அமைத்துள்ளது. 3 வேலை உணவுடன் பெண்கள் 1 நாள் தங்குவதற்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாடு சிறைத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு – 8 காலிப்பணியிடங்கள்! நாளை கடைசி நாள்!
Exams Daily Mobile App Download
மிகவும் நலிவடைந்த பெண்களுக்கு இதை விட கூடுதல் சலுகை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அரசு மொத்தம் ரூ.4.80 கோடி செலவிட்டுள்ளது. இந்த விடுதியில், பெண்களுக்கு தனி அறைகள் மற்றும் பலர் ஒன்றாக தங்கும் வகையிலான கூடமும் உள்ளது. கேரளா அரசின் இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்