தமிழகத்தில் அக்.6 & 9ம் தேதிகளில் பொது விடுமுறை அறிவிப்பு – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் இந்த 2 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா 2ம் அலை காரணமாக இடை நிறுத்தப்பட்டதான ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது வரவிருக்கும் மாதத்தில் நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுடன் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்த்து மொத்தம் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.
பண்டிகை காலங்களில் 144 தடை உத்தரவு அமல்? மத்திய அரசு அறிவுறுத்தல்!
அதாவது அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த இரு தினங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதனுடன் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள வாக்கு மையப்பணிகளில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டமாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் தினங்களில் பொது மக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அறிவித்துள்ளது.