இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, நெல்லை ஆகிய 9 மாவட்டங்கள் மட்டும் புதிதாக பிரிக்கப்பட்ட காரணத்தால் அந்த 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அக்.15 பிறகு ஆலோசனை!
இதனை கருத்தில் கொண்டு அக்-6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து வேட்புமனு தாக்கல் செயல்பாடுகள் முடிவடைந்துள்ளது. 9 மாவட்டங்களிலும் 97,831 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் பணியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி தொடர் பாட பயிற்சிகள் தொடங்கபட்டு முதற்கட்ட பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 18,870 பேருக்கு கொரோனா தொற்று – 378 பேர் உயிரிழப்பு!
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வழங்குவதால் வேலூர் மாவட்டத்தில் இன்று செப்-29 அம்மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ராணிப்பேட்டையிலும் தேர்தல் பயிற்சியின் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.