பண்டிகை காலங்களில் 144 தடை உத்தரவு அமல்? மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுப்பதால் பண்டிகை காலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க 144 தடை பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
144 தடை உத்தரவு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சுகாதார அமைப்பு மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே தொற்றை குறைக்க முடியும் என்று கூறியது. எனவே அதன் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டு மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பு பணியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அனைத்து வேலைகளிலும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மக்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியமான ஒன்றாக உள்ளது. கடந்த 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மக்கள் கூடுவதை தவிர்க்க அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டது. பண்டிகை காலங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம் இந்த நேரங்களில் மக்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. அதனால் மென்மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அதனால் கட்டுப்பாடுகளை மாநில அரசுக்கு விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அக்.15 பிறகு ஆலோசனை!
அதனை தொடர்ந்து தற்போது தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் நியூ இயர் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் இந்த பண்டிகை காலத்தில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவையும் விதிக்கலாம் என்று மாநில அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி நோய் பரவலை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
For lock down