TN TRB 9494 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திட்ட அட்டவணை வெளியீடு!

0
TN TRB 9494 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - திட்ட அட்டவணை வெளியீடு!
TN TRB 9494 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - திட்ட அட்டவணை வெளியீடு!
TN TRB 9494 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திட்ட அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் உள்ள விரிவுரையாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தேர்வு கால திட்ட அட்டவணையை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேர்வு கால அட்டவணை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக ஆசிரியர்கள் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு கால திட்ட அட்டவணையை தற்போது வெளிட்டுள்ளது. இதில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் உள்ள 9494 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!

மேலும் இந்த அறிவிப்பில் தெரிவித்ததாவது, இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் 2வது வாரத்தில் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஜூன் மாதம் 2வது வாரத்தில் போட்டித் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே மாதம் வெளியாகும். இதனை தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 167 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஜூன் 2வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இத்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும். இதனை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தில் இருக்கும் 1334 காலிப்பணியிடங்களை நிரப்பவும், மேலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவமும் நவம்பர் 2வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொறியியல் கல்லூரிகளில் 104 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 2 வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!