தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு பதிவை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மதுக்கடைகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் லிட்டிட பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் அனைத்து பகுதிளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பள்ளிகள் வாக்கு பதிவு மையங்களாக செயல்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 22 தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – மக்களுக்கு வாக்குறுதி!
அதன்படி நாளை வாக்கு பதிவு நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவு நாளன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல நாளை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம் மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 4 நகராட்சிகளும் 11 பேரூராட்சியில் உள்ள 275 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த வாக்கு பதிவு எண்ணிக்கை நாளை வட்டத்தில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி, சிவகங்கை, அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி, டி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை மற்றும் ஆறுமுகம்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர் ஆகிய 4 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடங்களில் 5 மீட்டர் சுற்றளவில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை செயல்பட மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.