தமிழக மின்வாரியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – தேர்வு அறிவிப்பு வெளியீடு!!
தமிழக மின் வாரியத்தில் புதிய ஆட்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட மின் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் மின்வாரியத்தில் வேலை வாய்ப்புகள் குறித்த போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம்:
தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 வருடங்களாக எவ்வித போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருவதால் போட்டித்தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து அரசு பணிகள் தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டது.
தமிழக மாவட்ட ஆட்சியர்கள் கவனத்திற்கு – மருத்துவத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு!!
மக்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மின் வாரியத்தில் புதிய ஆட்கள் தேர்வு குறித்த அறிவிப்பு 2022 ஜனவரி மாதம் வெளியாகும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தில் பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 50,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் அண்மையில் தெரிவித்தார். காலிப்பணியிடங்கள் நிரப்பபடாததால் பணியில் உள்ள ஊழியர்கள் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசு முக்கிய உத்தரவு!
இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு, தொழிற்சங்கங்கள் மின்சார வாரியத்தினை வலியுறுத்தி வருகின்றனர். உதவி பொறியாளர் பணியிடங்கள் – 600, கணக்கீட்டாளர் – 1300, இளநிலை உதவியாளர்- 500, ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 2020ம் ஆண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கொரோனா பரவலால் தேர்வு நடைபெறவில்லை. தற்போது விண்ணப்பித்தவர்கள் விரைவாக தேர்வு நடத்துமாறு மின் வாரியத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனால் ஆட்கள் தேவையின் அவசியம் கருதி தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.