தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசு முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி அரசு அறிவித்த 20 மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்புக்கு உரிய தொகையை விடுவிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு தொகுப்பு ரூ.62 என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு தொகுப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வருகின்ற 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான சில பொருட்கள் ஒரு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பு!
இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 20 மளிகை பொருட்கள் இடம்பிடித்துள்ளது. இப்போது இந்த பொங்கல் தொகுப்புக்கு உரிய தொகையை அனைத்து மண்டலங்களுக்கும் விடுவிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் கீழ், பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.62 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிச.22ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இப்போது மண்டல இணைப்பதிவாளர்கள் அந்தந்த மண்டலங்களில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேவையான பொங்கல் தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக, கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையை இம்முறையும் பின்பற்றி பொருட்களை கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டும் என்பதால் அதற்கு தேவையான மொத்த பணத்தையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்கள் பெற்று கொள்ளும்படிக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.