தமிழகத்தில் பள்ளிகளுக்கு டிச.25 முதல் 9 நாட்கள் விடுமுறை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைகளை முன்னிட்டு வரும் டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை 9 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பின் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தபட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இன்று முதல் தீவிரமடையும் முழு ஊரடங்கு – உலக நாடுகள் நடவடிக்கை! ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்ட சில வாரங்களில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட கடும் பாதிப்பின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இவ்வாறாக கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்பதன் அடிப்படையில் பாடங்களை விரைவில் நடத்தி முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி அகவிலைப்படி (DA) உயர்வு 3% – AICPI தகவல்!
ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெறும். பின்னர் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாடும் விதமாகவும், அரையாண்டு விடுமுறையாகவும் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. எனவே இந்த பண்டிகை நாட்களை முன்னிட்டு வரும் டிச.25ம் தேதி முதல் ஜன.2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின் ஜன.3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.