மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி அகவிலைப்படி (DA) உயர்வு 3% – AICPI தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் 2022 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களின் அகவிலைப்படி ஆனது 3% அதிகரிக்கப்பட்டு மொத்தம் 34% ஆக உயர்த்தப்படவுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
புதிய ஆண்டில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் 7வது சம்பள கமிஷன் பரிந்துரையின் படி மீண்டும் சம்பள உயர்வு அளிக்கப்படவுள்ளது. ஜனவரி 2022 இல் அகவிலைப்படி (டிஏ உயர்வு) எவ்வளவு அதிகரிக்கும் என்பது முடிவு செய்யப்படவில்லை. ஆனால் AICPI குறியீட்டின் தகவலின் படி 3% DA அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, பட்ஜெட் 2022 க்கு முன் பொருத்துதல் காரணி பற்றிய விவாதம் உள்ளது. இவை அமலுக்கு வந்தால் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் உயரும்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
அகவிலைப்படி ( DA )என்பது AICPI தரவுகளால் தீர்மானிக்கப்படும். நிபுணர்களின் கருத்துப்படி 2022 ஜனவரியிலும் அகவிலைப்படியை 3% அதிகரிக்கலாம். அதாவது, 3% உயர்வு இருந்தால், மொத்த DA 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அதிகரிக்கலாம். இறுதியாக செப்டம்பர் 2021 வரையில் அகவிலைப்படி (டிஏ) 32.81 சதவீதமாக உள்ளது. இதில், ஜூலை 2021 க்கான அகவிலைப்படி 31 சதவீதம் அதிகரிக்க பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த 3 மாதங்களின் கணக்கீட்டின் படி மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு உறுதியாகி விடும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – கைரேகை பதிவில் சிக்கல்! முக்கிய கோரிக்கை!
இதனால் மொத்த DA 3% முதல் 34% வரை அதிகரிக்கும். இதனால் 2022 ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படும். அகவிலைப்படியை 3% அதிகரித்த பிறகு, ரூ.18,000 அடிப்படை சம்பளம் பெறுபவர்களுக்கு மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். அதிகரித்த 3% DAவினால் சம்பளத்தில் ஆண்டுக்கு ரூ.6,480 அதிகமாக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) – ரூ 6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ 5580/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480.
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் -ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (34%) – ரூ 19346 / மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) – ரூ 17639/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 19346-17639 = 1,707 ரூபாய்/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484.