தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – 15 நாட்களுக்குள் வழங்க உத்தரவு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு :
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்றத்தேர்தலில் முக ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் மக்களிடம் நலன் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் ஆட்சிக்கு வந்தவுடன் 4000 ரூபாய் நிவாரணத் தொகையை 2 தவணைகளாக வழங்கினார். மேலும் ஊரடங்கு காலத்தில் மக்களின் நலன் கருதி இலவச மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.
ஒரு சிலிண்டர் ரூ.2,657 & ஒரு லிட்டர் பால் ரூ.250க்கு விற்பனை – பொதுமக்கள் அவதி!
இதனையடுத்து பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் புகைபடம் இருந்தால் தான் 1000 ரூபாய் கிடைக்கும் என்ற வதந்தியால் பெண்கள் மாவட்ட உணவு வழங்கல் துறைக்கு படையெடுத்த வண்னம் உள்ளனர். மேலும் இது குறித்து மக்கள் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக கோவில்கள் பாதுகாப்பு பணியில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!
இந்த நிலையில் நேற்று உணவு வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் திமுக பொறுப்பேற்றது முதல் இதுவரை 6.50 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் ரேஷன் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.