சௌந்தர்யா வெண்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது கனவு தான் – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ட்விஸ்ட்!

0
சௌந்தர்யா வெண்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது கனவு தான் - வெளியான 'பாரதி கண்ணம்மா' சீரியலின் ட்விஸ்ட்!
சௌந்தர்யா வெண்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது கனவு தான் - வெளியான 'பாரதி கண்ணம்மா' சீரியலின் ட்விஸ்ட்!
சௌந்தர்யா வெண்பாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது கனவு தான் – வெளியான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சௌந்தர்யா வெண்பாவை துப்பாக்கி வைத்து சுடுவது கண்ணம்மாவிற்கு வரும் கனவு என்று இன்றைய எபிசோடில் தெரிகிறது. வெண்பா இறந்து விடுவார் என்று நினைத்த ரசிகர்கள் இந்த செய்தியால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

‘பாரதி கண்ணம்மா’ சீரியல்

விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை தக்கவைத்து வரும் சீரியல் என்றால் அது, ‘பாரதி கண்ணம்மா’ தான். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த காட்சியான ஹேமா பற்றிய உண்மை கண்ணம்மாவிற்கு தெரிந்து விடுகிறது. 8 வருடங்களுக்கு பின்னர் தான் கண்ணம்மா தனக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்பதனை அறிகிறார். அதுவும் தனக்கு பிரசவம் பார்த்தது பாரதி என்று தெரிந்து நொந்து போய் விடுகிறார். கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தை பற்றி தெரியவில்லை என்பதால், அதனை வெண்பா தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி அவரை மிரட்டுகிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 வைல்ட் கார்டு என்ட்ரியாக வரப்போகும் பிரபல நடிகை? ரசிகர்கள் உற்சாகம்!

பாரதிக்கு விவாகரத்து கொடுத்தால் இரண்டாவது குழந்தை பற்றி கூறுவேன் என்று மிரட்டுகிறார். ஒரு பக்கம் பாரதியின் மீது அன்பு இருந்தாலும், தாய் பாசம் கண்ணம்மாவை விவாகரத்து கொடுக்க துணிய வைக்கிறது. அப்போது சௌந்தர்யா வந்து ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மாவிடம் கூறி விடுகிறார். இனி அடுத்து கண்ணம்மா ஹேமாவை தன்னுடன் அழைத்து செல்லுவாரா? ஹேமாவிடம் முதலில் உண்மையை கூறுவாரா? பாரதியின் முடிவு என்னவாக இருக்கும்? என்பது பற்றி இனி வரும் எபிசோட்களில் தான் தெரிய வரும். இது ஒரு புறம் இருந்தாலும், கடந்த 8 வருடங்களாக பாரதி & கண்ணம்மாவை சேர விடாமல் வெண்பா தடுத்து வருகிறார் என்பதை அறிந்து வெண்பாவின் மீது சௌந்தர்யாவிற்கு எப்போதுமே அதிகமான கோபம் இருக்கும்.

சமந்தா, நாகசைதன்யா விவாகரத்திற்கு காரணம் டிசைனர் ப்ரீதம்? வைரலாகும் பதிவு!

இந்த முறை அவரது கோபம் எல்லை மீறி சென்று விடுகிறது. இன்றைய எபிசோடில் சௌந்தர்யா துப்பாக்கி எடுத்து கொண்டு வெண்பா வீட்டிற்கு செல்லுகிறார். அங்கு வெண்பாவை துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார். தன்னை சுட வேண்டாம் என்று வெண்பா கெஞ்சுகிறார். ஆனால், சௌந்தர்யா அதனை கேட்காமல் அவரை சுட்டு விடுகிறார். அந்த நேரத்தில் கண்ணம்மா போலீசாருடன் வெண்பா வீட்டிற்கு வருகிறார். போலீசார் உள்ளே வந்ததும் அதுவரை செத்தது போல நடிக்கும் வெண்பா சௌந்தர்யாவை சுட வருகிறார். அப்போது சௌந்தர்யாவிற்கு நடுவே கண்ணம்மா வருகிறார். இவை அனைத்தும் கண்ணம்மாவிற்கு வரும் கனவு. இதனை நினைத்து இன்றைய எபிசோடில் கண்ணம்மா பதறியடித்து எழுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் கனவு என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!