ஒரு சிலிண்டர் ரூ.2,657 & ஒரு லிட்டர் பால் ரூ.250க்கு விற்பனை – பொதுமக்கள் அவதி!

0
ஒரு சிலிண்டர் ரூ.2,657 & ஒரு லிட்டர் பால் ரூ.250க்கு விற்பனை - பொதுமக்கள் அவதி!
ஒரு சிலிண்டர் ரூ.2,657 & ஒரு லிட்டர் பால் ரூ.250க்கு விற்பனை - பொதுமக்கள் அவதி!
ஒரு சிலிண்டர் ரூ.2,657 & ஒரு லிட்டர் பால் ரூ.250க்கு விற்பனை – பொதுமக்கள் அவதி!

இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

விலைவாசி உயர்வு:

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிடியில் சிக்கிக்கொண்டு பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை சற்று உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனாலும் கேரளா மற்றும் இலங்கை போன்ற இன்னும் சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இத்தகைய நிலை கொரோனா 3வது அலையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இலங்கையில் கொரோனா வீரியம் அடைந்த நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் விரைவில் நியமனம் – அமைச்சர் அறிவிப்பு!

இதனால் இலங்கையில் பொதுமுடக்கம் அமல்படுத்தி இலங்கையின் அதிபர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார். இலங்கையின் பொருளாதாரமே சுற்றுலா அடிப்படையில் உள்ள அந்நிய செலவாணியை நம்பி உள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அந்நிய செலவாணி இருப்பு குறையத் தொடங்கியது. அதனை தொடர்ந்து கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால் பொதுமுடக்கத்தில் தற்காலிகமாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணிவரை அத்தியாவசிய தேவைக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையில் உள்ள மக்கள் பொருளாதார நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

தமிழக கோவில்கள் பாதுகாப்பு பணியில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் தகவல்!

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2,657க்கும், 1 லிட்டர் பால் ரூ. 250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் கோதுமை, சர்க்கரை உட்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இத்தகைய விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் இலங்கை மிகப்பெரிய உணவு பஞ்சத்தை சந்திக்க நேரிடும் என்றும் மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!