9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, பேருந்துகள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையே பேருந்துகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
ஜார்க்கண்ட் அரசு சில நிபந்தனைகளுடன் 9 – 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும் வகுப்புகள் நண்பகல் 12 மணி வரை நான்கு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக இருக்கும். ஆன்லைன் வகுப்புகளும் தொடரும். ஏப்ரல் 22 ஆம் தேதி மாநிலத்தில் முதன்முறையாக ஒரு வாரத்திற்கு விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீட்டிக்கப்படுவது இது ஒன்பதாவது முறையாகும்.
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆகஸ்ட் 1 முதல் பொருட்கள் விநியோகம்!
யுஜி மற்றும் பிஜி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் ஆன்லைன் வகுப்புகளும் தொடரும். மேலும் குறைந்தபட்சம் கொரோனா ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
- அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
- உணவகங்கள் மற்றும் பார்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும், அதே நேரத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் திறக்க முடியும்.
- காய்கறி-பழ மளிகை/உணவகம்/பார், உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து கடைகளும் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை மூடப்படும்.
- சினிமா அரங்குகள், பார்கள், மல்டிப்ளெக்ஸ், உணவகங்கள் மாநிலத்தில் 50 சதவிகித திறனுடன் திறக்கப்படும்.
- பக்தர்களுக்காக மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும். ஊர்வலங்கள் மீதான தடை தொடரும்.
- மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருக்கும்.