அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு – தொழில்துறை ஒதுக்கீடு சேர்க்கை!
தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில்துறை ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை அறிவிக்கப் பட்டுள்ளது.
மாணவா் சோ்க்கை:
கொரோனா தொற்றின் தீவிர தாக்கத்தின் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் படங்கள் நடத்தப்பட்டு தேர்வுகள் வைக்கப்பட்டது. கொரோனா தாக்கத்தின் காரணமாக 12ம் வகுப்பிற்கான தேர்வை ரத்து செய்து அனைவரும் பாஸ் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுக்கு விருப்ப பாடத்தை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர்.
தமிழகத்தில் எகிறும் முகக்கவசம், சானிடைசர் விலை – கட்டுப்படுத்த கோரிக்கை!
பல்வேறு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அண்ணா பல்கலையில் வளாக கல்லூரிகளான, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்ப செட்டியாா் தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகிய கல்லூரிகளில், தொழில்துறை ஒதுக்கீட்டில் பி.இ., – பி.டெக்., படிப்பில் மாணவா்கள் சோ்க்கப்படுகின்றனா். தகுதியுடைய மற்றும் ஆர்வம் உடைய மாணவர்கள் விண்ணப்பிக்கும்படி அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி & கல்லூரிகள் திறக்க அனுமதி – கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு
கொரோனா காலம் என்பதால் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுடைய மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 15ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்களின் பரிந்துரையில் மட்டும், இந்த சோ்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.