இன்று முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறப்பு – ஆந்திராவில் ஊரடங்கு தளர்வுகள் அமல்!
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி தியேட்டர்கள், ஜிம்கள் மற்றும் உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்துவதன் நோக்கில் மாநில வாரியாக பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்படுகின்றது. ஆந்திர மாநிலத்தில் 3,166 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19.1 லட்சமாக உயர்ந்து உள்ளது. தற்போது 32,356 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இந்நிலையில் அங்கு இன்று (ஜூலை 8) முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, தியேட்டர்கள், உணவகங்கள், ஜிம்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதாவது தியேட்டர்களில் மாற்று இருக்கை ஏற்பாடுகள், 50 சதவீத இருக்கை திறன் கொண்ட உணவகங்கள், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்றி செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் 3296 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு மாத ஊதியம் – அரசாணை வெளியீடு!
இருப்பினும், அனைத்து வணிக நிறுவனங்களும் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும். கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணி முதல் 6 மணி வரை அமலில் இருக்கும். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆசிரியர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.