தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடன் உதவி – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடன் உதவி
பொதுவாக வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை கொரோனா பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவியாக பல்வேறு கடன் தொகைகளை அளித்து வருகிறது. இதிலும் குறிப்பாக கொரோனா சிகிச்சைகளுக்கு என சிறப்பு கடன் உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – முதன்மை கல்வி அலுவலர்!
அதாவது தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கடன் உதவித்தொகையானது ஆசிரியர்களின் திருமண செலவுகள், பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை வாங்குவதற்காகவும் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
உணவகங்கள் இரவு 10.30 மணி வரை செயல்பட அனுமதி – ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு!
இது குறித்த தகவலை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், ‘தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.