தமிழகத்தில் 1 டூ 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு கொடுக்க வேண்டிய அளவு – தினசரி மெனு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்பதற்கான மெனு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
காலை உணவு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தவும், மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை தவிர்க்கவும் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன் முதலில் கடந்த 1957 ஆம் ஆண்டில் தான் இலவச உணவு திட்டம் காமராஜரால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பின்னர் 1982 ஆம் ஆண்டில் எம்ஜியாரின் சத்துணவு திட்டமும், 1989ல் கருணாநிதியின் சத்துணவுடன் கூடிய முட்டை திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் வழங்கப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
இதன் பின்னர், 2012 ஆம் ஆண்டில் கலவை சாதம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்திற்காக 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிட்டத்தட்ட 1,14,095 குழந்தைகளுக்கு பள்ளி வேலைநாட்களில் காலை உணவு வழங்கப்படவுள்ளது. இதனிடையே, ஒவ்வொரு நாளும் என்னென்ன உணவுகள் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ளன என்பதற்கான மெனு பட்டியலும் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – இனி 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்!
அதாவது, திங்கட்கிழமை ஏதாவது ஒரு உப்புமா வகையுடன் காய்கறி சாம்பாரும், செவ்வாய்க்கிழமைகளில் எதாவது ஒரு காய்கறி கிச்சடியும், புதன்கிழமை பொங்கலுடன் காய்கறி சாம்பாரும், வியாழக்கிழமைகளில் உப்புமா வகைகளுடன் காய்கறி சாம்பாரும், வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் கேசரியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரத்தில் இரண்டு நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களை கொண்டு காலை உணவு தயார் செய்ய வேண்டும் எனவும், காலை 8.15 மணி முதல் 8.45 மணிக்குள் மாணவர்களுக்கு காலை உணவு பரிமாற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 150 முதல் 200 கிராம் அளவில் உணவு வழங்கப்பட வேண்டும் எனவும், 60 மில்லி கிராம் அளவில் சாம்பார் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.