அம்மா மினி கிளினிக் பணி நிரந்தரம் கிடையாது – சென்னை ஆணையர் தகவல்!!
சென்னையில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி மூன்றாவது ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமணை பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்தார்.
அம்மா மினி கிளினிக் பணியாளர்கள்:
தமிழகத்தில் உள்ள கிராம புறங்களில் மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த அம்மா மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும்.
TN Job “FB Group” Join Now
இந்த கிளினிக்குகள் காலை 9 மணி முதல் 11 வரையும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும். இந்த கிளினிக்கில் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களுக்கும், ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது. இந்த கிளினிக்குகளில் பணிபுரிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு பணியாளர்கள் ஈட்டிய விடுப்பு – மே மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்!!
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் அம்மா கிளினிக் குறித்து பேசிய அவர் அதில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமணை பணியாளர்கள் பிற நிறுவனங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்