தமிழக அரசு பணியாளர்கள் ஈட்டிய விடுப்பு – மே மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்!!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு மே மாதம் முதல் ஈட்டிய விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு சம்பளம்:
தமிழகத்தில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருடத்தில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக வழங்கப்படும். இந்த நிலையில் அந்த 15 நாட்கள் விடுமுறை எடுக்காத பணியாளர்களுக்கு அந்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆண்டு முடிவில் வழங்கப்படும் இந்த சம்பளம் எந்த பிடித்தமும் இன்றி வழங்கப்படும். இதனை பணியாளர்கள் 2 ஆண்டுகள் கழித்து 1 மாத ஊதியமாக கூட பெற்றுக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்த அரசாணை ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது இந்த அரசாணையில் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
கோவையில் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி – மாணவர்கள் அச்சம்!!
இதுகுறித்து பணியாளர் நலன் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் ஹர்சகாய் மீனா வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு நடைமுறைக்கு வந்து 1 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அந்த காலத்திற்கான சம்பளத்தை பெற முடியாது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் இந்த தடை முடிவடைய உள்ள நிலையில், மே மாதம் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு பெற விண்ணப்பிக்கலாம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்