IPL 2022: CSK ரசிகர்கள் கவனத்திற்கு – பிளேயிங் XI அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக இணையும் வீரர்கள் இவர்கள் தான்?
இந்த சீசனுக்கான IPL போட்டியை தோல்வியுடன் துவங்கி வைத்திருக்கும் CSKவின் அடுத்த ஆட்டத்தில் பிளேயிங் லெவன் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஷிவம் துபேவுக்கு பதிலாக களமிறக்கப்பட இருக்கும் 3 வீரர்கள் யார் என்ற தகவலை காணலாம்.
IPL போட்டிகள்
இந்தியன் பிரிமியர் லீக்கில் (IPL) வரலாற்றில் இரண்டாவது வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2022 சீசனை தோல்வியுடன் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதில் KKR அணியை சேர்ந்த உமேஷ் யாதவ் முதல் ஓவரிலேயே ருதுராஜை ஆட்டமிழக்க செய்தார். அதன்பிறகு CSK அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து முன்னாள் CSK அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஸ்ரைக்குக்கு வந்தார். தோனியின் அரை சத்தத்தினால் CSK அணியால் 131 ரன்களை பெற முடிந்தது.
தமிழகத்தில் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!
எம்எஸ் தோனியைத் தவிர, ரவீந்திர ஜடேஜாவும் சில நல்ல ஷாட்களை ஆடினார். இந்த தோல்வியை தொடர்ந்து CSK அடுத்த ஆட்டத்தில் விளையாடும் XI அணியை மாற்ற நினைக்கலாம். மேலும், முதல் ஆட்டத்தை தவற விட்ட CSK அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி அடுத்த ஆட்டத்தில் களமிறங்க இருக்கிறார். இப்போது சிவம் துபேக்கு பதிலாக லெவன் அணியில் வேறு சில வீரர்களுக்கு இடம் கொடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அவர் முதல் ஆட்டத்தில் ஆறு பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பந்து வீச்சை பொறுத்தமட்டில் துபே ஒரு ஓவரை வீசி 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இப்போது CSK அணியில் இவரைத் தவிர வேறு நல்ல விருப்பங்கள் உள்ளன. அதனால் துபேவுக்கு பதிலாக வேறு எவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியும். அந்த வகையில் CSK லெவன் அணியில் ஷிவம் துபேக்கு பதிலாக களமிறக்கப்பட வாய்ப்புகள் இருக்கும் மூன்று வீரர்களின் விவரங்களை இப்போது காண்போம்.
டுவைன் பிரிட்டோரியஸ்
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஆல்-ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ், மிடில் ஆர்டரில் இருக்க ஒரு அற்புதமான தேர்வாக இருக்கலாம். சிவம் துபேயின் இடத்தில் அவர் கச்சிதமாக பொருந்துவார். டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சிறிது காலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் இன்னும் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவுக்காக 22 டி20 போட்டிகளில் விளையாடி 161.9 ஸ்ட்ரைக் ரேட்டில் 170 ரன்கள் எடுத்துள்ளார். 19.48 சராசரியில் 23 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
இதனால் CSK விளையாடும் XI அணிக்கு டுவைன் பிரிட்டோரியஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இப்போது IPL போட்டிகளில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் காரணமாக, பிரிட்டோரியஸ் விளையாடுவது சந்தேகமாக இருக்கிறது. அதனால் ஆடம் மில்னே மாதிரி யாரையாவது பெஞ்சில் உட்கார சொல்லி விட்டு கே.எம்.ஆசிஃப் உடன் விளையாடும் 11 அணியில் பிரிட்டோரியஸுக்கு ஒரு இடத்தை கொடுக்கலாம்.
ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்:
சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 2022 U-19 உலகக் கோப்பையை இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஹங்கர்கேகர் தனது ஆல்ரவுண்ட் திறன்களால் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களையும், நிபுணர்களையும் கவர்ந்தார். அதனால் அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் அவர் பேட்டிங் மூலம் பங்களிக்க முடியும். இப்போது 2022 சீசனில் மீதமுள்ள அனைத்து கேம்களையும் விளையாட சிஎஸ்கே அவருக்கு வாய்ப்பளிக்கலாம். ஹங்கர்கேகர் துபேவின் இடத்தை முழுமையாக நிரப்புவார் மற்றும் நம்பர் 7ல் பேட் மூலம் அவரால் அற்புதமாக பங்களிக்க முடியும்.
KM ஆசிஃப்:
KM ஆசிஃப் 2018ம் ஆண்டு முதல் CSK உடன் இருக்கிறார். ஆனால் இதுவரை மூன்று ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். கேரளாவை சேர்ந்த திறமையான வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் 2017-18 மண்டல டி20 லீக்கில் கேரளாவுக்காக அறிமுகமானது முதல் விளையாடி வருகிறார். அந்த போட்டியில் அவரது அற்புதமான செயல்பாட்டிற்கு பிறகு, 2018 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் அவர் சிஎஸ்கேவால் வாங்கப்பட்டார். இப்போது துபேக்கு பதிலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை என்றால், இந்த இடத்தை ஆசிஃப் நிரப்பலாம். மேலும் ஆடம் மில்னேவுக்கு சிறந்த துணையாகவும் அவர் இருப்பார். அதே நேரத்தில் தீபக் சாஹர் இல்லாததால், பந்துவீச்சை வலுப்படுத்த CSK நிர்வாகம், ஆசிப்பை கொண்டு வரலாம்.