இனி முழுவதும் WFH தான் .. அலுவலகத்திற்கு வர தேவையில்லை – மத்திய அரசின் அறிவிப்பு!
நாடு முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் தற்போது சமீப காலமாக அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஐடி நிறுவன ஊழியர்களுக்கு WFH வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு நிலைமை சீரடைந்து பள்ளி, கல்லூரிகள் கூட செயல்பட தொடங்கியதும் மீண்டும் ஊழியர்கள் அலுவகத்திற்கு அழைக்கப்பட்டனர். ஆனால் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல மறுத்து வந்தனர். அதிக நேரம் மற்றும் செலவு தான் ஊழியர்கள் அலுவகத்திற்கு மீண்டும் வர மறுப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம் – மூளை வளர்ச்சியில் மாற்றம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், மத்திய அரசு டிசம்பர் 31,2023 வரை சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளில் இயங்கி வரும் நிறுவனங்களில் இருக்கும் ஐடி பிரிவு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வராமல் WFH முறையை தொடர்ந்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு நிறுவனங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஊழியர்களின் வசதிக்காக ஐடி நிறுவனங்கள் பெரிய அலுவலகங்களை தவிர்த்து பெரிய நகரங்களில் முக்கிய பகுதிகளில் சிறிய அலுவலகங்களை திறக்க முடிவு செய்துள்ளது.