கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம் – மூளை வளர்ச்சியில் மாற்றம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம் - மூளை வளர்ச்சியில் மாற்றம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம் – மூளை வளர்ச்சியில் மாற்றம்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா எனும் வைரஸ் தொற்று தற்போது வரை நம்மை ஆட்டி படைத்து வருகிறது. இந்த கொரோனாவை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கால் இளம் பருவத்தினரின் மூளை வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

மூளை வளர்ச்சி:

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று எதிர்பாராத அளவுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் காற்றின் மூலமாக ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவும் தன்மையுடையதால் விரைவாக மனிதர்களிடையே பரவி பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. சீனா மட்டுமல்ல இந்தியா, ரஷ்யா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த தொற்றில் இருந்து மீண்டு வர ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியில் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காலம் பொதுமக்களுக்கு ஒரு பெரும் சவால் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தியது. இந்த ஊரடங்கால் மக்கள் பொருளாதார ரீதியாகவும்,மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்திலிருந்து அகமதாபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் தொடக்கம் – ரயில்வே துறை வெளியிட்ட அறிவிப்பு!!

Follow our Instagram for more Latest Updates

தற்போதைய ஆய்வு ஒன்றில் ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் இளம் பருவத்தினரின் மூளை வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூளையின் வெளிப்புறத்தை மூடி இருக்கும் cortex -ல் சில மாறுபாடுகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!