பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ், ஆனால் தேர்வுகள் உண்டு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. எனவே தேர்வுகள் இன்றி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதாக பாக்கிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளார்.
அமைச்சர்:
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவியதால் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் தொற்று பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா 2ம் அலை தொடர்ந்து படிப்படியாக நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது. இது கொரோனா 3ம் அலையாக இருக்கும் என மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 152 வார்டுகளில் அமல் – கொரோனா எதிரொலி!
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் சரிவர இயக்கப்படவில்லை. இது குறித்து பாகிஸ்தான் மாகாணங்களின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் ஷபக்த் மஹமூத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மெட்ரிக், இன்டர்மீடியட் தேர்வுகளுக்கு தயாராவதில் மாணவர்களுக்கு சிக்கல் இருந்தது. இதனால் அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும் என அனைத்து மாகாண கல்வி அமைச்சர்களும் கூறினார்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 6 பேருக்கு கொரோனா – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ஷபக்த் மஹமூத் கூறியதாவது, மாணவர்கள் தேர்ச்சி அடைய தவறும் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கு 33 சதவீத மதிப்பெண் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். பாடத்திட்டம் ஏதும் குறைக்கப்பட மாட்டாது. மாணவர்கள் இந்த பெருந்தொற்று காலத்துக்கு இடையேயும் முழுக் கவனத்தையும் கல்வியில் செலுத்த வேண்டும். வரும் 16ம் தேதி முதல் அனைத்துக் கல்வி நிலையங்களும் திறக்கப்படும் என கூறியுள்ளார்.