கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 152 வார்டுகளில் அமல் – கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து 152 வார்டுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம் நோய் பரவும் விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் எல்லை பகுதிகளில் தொற்று சற்று தீவிரமாக பரவி வருகிறது. திருப்பூர், கோவை மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சென்னையிலும் சில பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து உள்ளது.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 6 பேருக்கு கொரோனா – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
கொரோனா 2ம் அலை தொடர்ந்து நோய் பரவும் விகிதம் அதிகமாவதால் 3ம் அலை தொடங்கி விட்டது என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்டங்களில் உள்ள பாதிப்பு நிலவரத்தை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில் திருவிழா முதலியவற்றிற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தமிழக தனியார் பள்ளி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா அறிகுறி – பெற்றோர்கள் அச்சம்!
தற்போது இடுக்கி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் 52 ஊராட்சிகள் சார்பில் 792 வார்டுகளும், 2 நகராட்சிகளில் 69 வார்டுகளும் உள்ளன. கொரோனா அதிகமாக இருந்த 200 வார்டுகளில் கடந்த வாரம் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த வாரம் 37 ஊராட்சிகளில் 137 வார்டுகளிலும், நகராட்சிகளில் 15 வார்டுகளிலும் என 152 வார்டுகளில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது என குறிப்பிடத்தக்கது.