AIIMS INI CET நுழைவுத்தேர்வு ஒரு மாதம் ஒத்திவைப்பு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் நடப்பு ஆண்டுக்கான ஐ.என்.ஐ சி.இ.டி தேர்வை கொரோனா காரணமாக தள்ளிவைக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களை நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஐ.என்.ஐ சி.இ.டி தேர்வு:
கொரோனா தொற்றின் 2ம் அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மாணவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக ஓட்டுநர் உரிமம் பெரும் வழிமுறைகள்!!
மேலும், நாடு முழுவதும் நடக்க திட்டமிடப்பட்டிருந்த முக்கிய பொதுத்தேர்வுகள் மட்டும் நுழைவு தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மேலும், பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிப்பதால் பல வாரிய தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) ஜூன் 16ம் தேதி 2021ம் ஆண்டுக்கான ஐ.என்.ஐ சி.இ.டி தேர்வை நடத்த திட்டமிட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த தேர்வை கொரோனா காரணமாக தள்ளிவைக்குமாறு மருத்துவர் சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது தேர்வை ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்வு நடத்தலாம் என்று நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.